இரு கரைகளையும் தொட்டபடி மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் லேசாக குளிர்ச்சி நிலவுகிறது. மேலும் கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையினால் சோத்துப்பாறை அணை முற்றிலுமாக நிரம்பி வராக நதி வழியாக மதுரை வைகை ஆற்றுக்கு தண்ணீர் வந்துள்ளது. இந்த தண்ணீரானது ஆற்றின் இரு […]
