குடிநீர் பிரச்சனையால் அவதிப்பட்ட பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் காந்திநகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் காந்திநகர் பகுதியில் கூட்டு குடிநீர் திட்ட மின்மோட்டார் பழுதடைந்த காரணத்தால் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் கோபமடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலையில் […]
