100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இலவசமாக தர்பூசணி வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம், பேரணி, நடனம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு இலவசமாக தர்பூசணி […]
