கழிவுநீர் கால்வாய் அமைத்து சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஹோப் பார்க் குடியிருப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வாழும் மக்களின் வசதிக்காக கோத்தகிரி பேரூராட்சி சார்பில் தார் சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தார் சாலை கழிவுநீர் மற்றும் மழை நீர் கால்வாய் வசதியுடன் அமைக்கப்படாததால், அங்குள்ள பெரும்பாலான வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர் மற்றும் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து […]
