நடவு பணி தொடங்கியதால் கொள்முதல் நிலையங்களை அமைத்து உடனடியாக பணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணத்தினால் பாலாறு மற்றும் பொன்னையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்டத்தில் இருக்கும் ஏரிகள் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருக்கிறது. இதனை அடுத்து விவசாய கிணறுகளில் நீர் ஊற்று ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணத்தினால் ஆற்காடு உள்பட 10 இடங்களில் சிறு சிறு விவசாயிகள் தங்கள் நிலத்தை உழுது […]
