ஜப்பானில் மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கட்சுனோபு கேதோ கூறினார். சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆகையால் இங்குள்ள வெளிநாட்டினர் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பிவருகின்றனர். ஜப்பான் அரசும் சுகாதார அவசரநிலையை அறிவித்து சீனாவில் சிக்கியுள்ள ஜப்பானியர்களை மீட்டுவருகிறது. அந்த வகையில் ஹாங்காங்கிலிருந்து 273 ஜப்பானியர்கள் விமானத்தில் அழைத்துவரப்பட்டனர். அவர்களில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளது. தற்போது […]
