நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எதும் செய்யவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் முனியசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றத்தின் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கட்சியில் சிறிய தவறு நடந்தாலும் அதனை திருத்திக் கொள்ளும் தைரியம் எங்களுக்கு உண்டு எனக் கூறிய கமல்ஹாசன் மக்களின் அடிப்படை வசதிகயை கூட செய்து கொடுக்காத இந்த ஆட்சி அகற்றப்பட […]
