திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. ஏழுமலையானை தரிசிக்க தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருகின்றனர். அதனால் கொரோனா காலகட்டங்களில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டிருந்தது. அத்துடன் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அதனால் கிராமப்புறங்களில் உள்ள […]
