திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா இம்மாதம் 18-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில்ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இம் மாதம் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. அன்று அதிகாலை ஒரு மணியளவில் கோயில் நடை திறக்கப்படும் பின்பு விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்படும். […]
