மத்திய அரசு அமைப்பான டிஆர்டிஓ ஒரே நேரத்தில் 5 பேருக்கு பயன்படுத்தக்கூடிய வகையிலான வெண்டிலேட்டர் சாதனத்தை உருவாகியுள்ளது. பாரத் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்த இயந்திரங்கள் தயாரிக்கப்படவுள்ளன. பாரத் எலக்ட்ரானிக் நிறுவனம் முதற்கட்டமாக 5000 வென்டிலேட்டர்களை தயாரித்து நாடெங்கும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஏப்ரல் இறுதியில் அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் வெண்டிலேட்டர் சாதனங்களின் தேவை பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் […]
