சிறப்பு வாகன சோதனையின் போது விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன், சக்திவேல், கருணாநிதி ஆகியோர் பள்ளிகொண்டா சுங்கசாவடி அருகில் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களின் ஓட்டுனர்கள் சீருடை அணிந்துள்ளனரா என்றும், ஆம்னி பஸ்களில் கூடுதல் பயணிகள் பயணம் செய்கின்றார்களா என்றும், தகுதி சான்றிதழானது புதுப்பிக்கப்பட்டு உள்ளதா என்றும் ஆய்வு நடத்தினர். […]
