வெள்ளகோவில் அருகே நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நூல்கள் எரிந்தன. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள அகலரப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவர் டபுளிங் நூற்பாலை நடத்தி வருகிறார். இவரது நூற்பாலையில் குறைந்த எண்ணிக்கையில்லே தொழிலாளர்களே வேலை பார்த்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று நூற்பாலையில் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நூற்பாலைக்கு வெளியே டபுளிங் செய்த நூல் கோன்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. […]
