சேற்றில் சிக்கிய சரக்கு வாகனத்தால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெறும் சாலைகள் கனமழை காரணமாக சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் கேரட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சரக்கு வாகனம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த சரக்கு வாகனம் மரப்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது அதன் டயர் சேற்றில் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் தொடர்ந்து […]
