தேனி மாவட்டம் அருகே இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் அதனை ஒட்டி வந்தவர் எதிரே வந்த லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது . தேனி அருகே வீரபாண்டியை அடுத்து உப்பார்பட்டியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது மனைவி மற்றும் ஒன்பது வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் வீரபாண்டி நோக்கி சென்றுள்ளார். அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது குமுளி நோக்கி லாரி ஒன்று வேகமாக வந்து உள்ளது. […]
