சத்தீஸ்கரில் மாவட்ட கலெக்டர் ஒருவர் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் அனைத்து பெற்றோர்களும் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். எப்பாடுபட்டாலும் பட்டாலும் பரவாயில்லை. கஷ்டப்பட்டாவது கடன் வாங்கியாவது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று நினைத்து சிரமத்திற்கு ஆளாகின்றனர். தனியார் பள்ளியில் படித்தால்தான் தங்கள் பிள்ளைகள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகின்றனர். அதன் காரணமாகவே தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர். […]
