வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவன் உள்பட 6 மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கனங்கூர் பகுதியில் கிரிதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் இதே மாவட்டத்தில் வசிக்கும் பார்வதி என்ற பெண்ணுக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பின் பார்வதியின் நடத்தையில் கிரிதரனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் தனது மனைவியை அவரின் தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். […]
