கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தீர்த்தவாரி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் ஒவ்வொரு சமுதாயதினர் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றன. 9 ஆவது நாளில் கம்மவார் சங்கம் சார்பில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று தீர்த்த விழா நடைபெற்றத்ததையடுத்து , அதிகாலை 1 மணிஅளவில் கோயில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் அம்மனை வழிபட திரண்டனர். மேலும், அம்மனுக்கு சிறப்பு […]
