கட்சி நிர்வாகியின் இறுதிச் சடங்குக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கதறி அழும் காட்சி காண்போரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த பன்னீர் என்பவர் மதிமுக வேலூர் மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளராகவும், அக்கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டுவந்த பன்னீர், நேற்று காலை மரணமடைந்தார். இவரது இறுதிச் சடங்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டு அவரது […]
