தேர்தலை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 26-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் 5 பேரூராட்சிகள் மற்றும் 3 நகராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த குழுவினர் […]
