ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் தலைநகர் தூனிசில் (Tunis) செயல்பட்டு வருகிறது அமெரிக்கத் தூதரகம். இந்த நிலையில் இந்த தூதரகத்திற்கு நேற்று இரண்டு பைக்கில் வந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை அங்கு திடீரென வெடிக்கச் செய்தனர். தற்கொலை தாக்குதலில் அவர்கள் இருவரும் பலியாகி விட்டனர். அதுமட்டுமில்லாமல் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரும் கொல்லப்பட்டார். […]
