பொது இடங்களில் எச்சில் துப்பவோ, சிறுநீர் கழிக்கவோ கூடாது. அவ்வாறு மீறினால் குறிப்பிட்ட நபருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் நேற்று புதிதாக 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,767 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 911 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் 27 பேருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு […]
