மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரும்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் சேகர் என்பவர் வசித்துவருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நுங்கம்பாக்கம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பெரும்பாக்கம் காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி இவரின் மீது மோதி விட்டது. […]
