தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நான்காவது கட்ட தளர்வு குறித்து திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கிடையாது. தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்படும். மாவட்டத்திற்குள் தனியார் […]
