வாலிபர்களுக்கு இடையே நடந்த தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முத்துசாமிபுரத்தில் பூசத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் உமயவேலு மற்றும் மூக்கன் ஆகிய இருவர் வசித்து வந்துள்ளனர். இந்த இரண்டு குடும்பத்தினரிடையே இட தகராறு நீண்டகாலமாக உள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு பூசத்துரைக்கு எதிராக விசாரணையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பூசத்துரையின் வீட்டின் முன்பு வேலுவின் மகன் ஹேமநாதன் மற்றும் […]
