குளித்துக் கொண்டிருக்கும் போது தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 12-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜகோபால் நகரில் வீரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பரத் ஹரிஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பரத் ஹரிஷ் தனது நண்பர்களுடன் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் ஹரிஷ் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக […]
