விஷவாயு தாக்கி வட மாநில இளைஞர்கள் உயிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது . திருப்பூர் மாவட்டத்தில் கவுண்டம்பாளையம் என்னும் பகுதியில் இயங்கி வரும் சாய தொழிற்சாலை ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியானது இன்று நடைபெற்றது. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென விஷவாயு தாக்கியதால் பணிபுரிந்து கொண்டு இருந்த வடமாநில இளைஞர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் […]
