தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதம் இரண்டு முறை எண்ணப்படும். இந்த மாதம் முதல் முறையாக நேற்று கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வைத்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதனையடுத்து இணை ஆணையர்(பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், […]
