ஊரடங்கு நேரத்தில் போக்குவரத்து வசதி இல்லாததால் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆதிவாசி மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். தமிழகத்தில் கோரானா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் ஆதிவாசி மக்கள், தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் ஊரடங்கு காலத்தில் தங்களுக்கு […]
