கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் அரசு அமைத்து வந்த தற்காலிக மருத்துவமனைக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தற்போது ஹாங்காங்கிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக அப்பிராந்திய அரசு அவசர நிலைப் பிரகடனம் செய்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் நோக்கில் காலி அரசு ஹவுஸிங் கட்டடம் ஒன்றைத் தற்காலிக மருத்துவமனையாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருந்தது. […]
