ஊருக்குள் புகுந்த காட்டு எருமை பெண் ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கன்னிகாதேவி காலனியில் சந்திர மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தானலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சந்தானலட்சுமி தனது வீட்டில் உள்ள குப்பைகளை கொட்டுவதற்காக வெளியே உள்ள குப்பை தொட்டிக்கு அருகில் சென்றபோது, அங்குள்ள புதரின் பின்னால் மறைந்து நின்று கொண்டிருந்த காட்டெருமை திடீரென வெளியே வந்து சந்தானலட்சுமியை விரட்டி உள்ளது. இதனால் அவர் அங்கிருந்து தப்பி […]
