டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கார்களை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் விவிலியா டிரான்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் ஏராளமானோர் தங்களது கார்களை வாடகைக்கு விட்டுள்ளனர். இந்த நிறுவனத்தின் உரிமையாளரான அருண் குமார் என்பவர் காரின் உரிமையாளர்களுக்கு ஒழுங்காக வாடகை தொகையை கொடுப்பதில்லை என பல்வேறு புகார்கள் வந்துள்ளது. மேலும் வாடகைக்கு வந்த கார்களை உரிமையாளர்களுக்கு தெரியாமல் அடமானம் வைத்து அருண்குமார் பணம் […]
