முதல் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு பேரூராட்சியில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு பேரூராட்சி சமுதாய கூடத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த பயிற்சி வகுப்பு தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் பயிற்சியின்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர், உதவி அலுவலர், தேர்தல் பிரிவு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டு பயிற்சியளித்துள்ளனர். இதில் கலந்து கொண்ட வாக்குப்பதிவு […]
