வெளிமாநிலங்களுக்கு செல்லும் சரக்கு ரயிலின் 4-ஆவது பெட்டி திடீரென தடம் புரண்டது. சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி ரயில்வே யார்டுக்கு சரக்கு ரயில் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. அதன்பின் அந்த பொருட்கள் கண்டெய்னர் மற்றும் லாரி மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வியாசர்பாடி ரயில்வே யார்டிலிருந்து வெளிமாநிலங்களுக்கு சரக்கு ரயில் ஒன்று அதிகாலை 4 மணி அளவில் புறப்பட்டுள்ளது. இந்த ரயிலானது தண்டையார்பேட்டை நேரு நகர் அருகில் […]
