அரசுப் பள்ளியின் மேற்கூரை பலத்த காற்றினால் பறந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் அப்பகுதியில் கடுமையான குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒரு பகுதியில் போடப்பட்டிருந்த இரும்பு தகரத்தால் ஆன மேற்கூரை காற்றில் பறந்து கீழே விழுந்து விட்டது. அப்போது அங்கு பொதுமக்கள் யாரும் இல்லாததால் […]
