Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தடுப்புப் பணிக்காக இதுவரை ரூ.36.34 கோடி நிதி கிடைத்துள்ளது – தமிழக அரசு தகவல்!

கொரோனா தடுப்புப் பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.36.34 கோடி நிவாரண நிதி கிடைத்துள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. நிறுவனங்கள், பொதுமக்களிடமிருந்து மார்ச் 31ம் தேதி வரை ரூ.36,34,2,529 நிவாரண நிதி கிடைத்துள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் – ரூ. 5 கோடி, சக்தி மசாலா நிறுவனம் – ரூ. 5 கோடி, ஏசியன் பெயிண்ட் நிறுவனம் – 2 கோடி கொடுத்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர். மேலும் திமுக சார்பில் ரூ. 1 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா ஊரடங்கின் போதும் பணிசெய்யும் நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. விற்பனையாளர்களுக்கு ரூ. 2500, கட்டுனர்களுக்கு ரூ. 2000 வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். அரசின் இந்த அறிவிப்பால் 21,517 விற்பனையாளர்கள், 3,77 பொட்டலமிடுபவர்கள் பயனடைவார்கள். கொரோனா நிவாரணமாக அனைத்து வகை அரிசி பெறும் ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1,000 உதவியும், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை இலவசமாகவும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். ஏப்., 2 ம் தேதி தொடங்கி 15ம் […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்த கோரி வழக்கு… தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனி முகாம்களில் வைத்து சிகிச்சை அளிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்களை வீடுகளில் இருந்து வெளியேற்றி தனி முகாம்களில் வைத்து சிகிச்சை அளிக்க கோரி வழக்கறிஞர் ஜான் மில்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை வழக்கு குறித்து தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 144 தடை உத்தரவு அமல்படுத்துவது குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை!

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்துவது குறித்து அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமை செயலாளர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலாக உள்ள நிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 144 தடை தடை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து துறை செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் எவ்வித […]

Categories
மாநில செய்திகள்

நாளை நமக்காக ஒரு நாள், அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் இந்த 9 வைரஸ் பரவி வருவதால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை பரிசோதனை செய்வதற்காக சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஓய்வுபெற்ற மருத்துவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளோம். தேவைப்படும் போது பணிக்கு வரும் படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் அடிப்படை வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு அரசு உதவ வேண்டும் : ரஜினிகாந்த் வேண்டுகோள்!

தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை பாராட்டத்தக்கவை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தமிழக அரசோடு மக்களாகிய நாமும் இணைந்து கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம் என கூறியுள்ள அவர், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால் அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் […]

Categories
மாநில செய்திகள்

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என அவர் கூறியுள்ளார். மீன்வளத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்த காரணத்தினால் தான் மீன்வளத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடல் அரிப்பை தடுக்க சுற்றுச்சுவர் அமைக்க தமிழக அரசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு சிறப்பு குழு அமைப்பு!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு சிறப்பு குழு அமைத்துள்ளது. தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த 18 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த குழு தினசரி ஆய்வு செய்யும் என கூறப்பட்டுள்ளது. சுகாதாரம், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்து, தகவல் தொழிநுட்பம், காவல்துறை, ரயில்வே, துறைமுகம் மற்றும் விமானம் போக்குவரத்து துறை […]

Categories
மாநில செய்திகள்

5 புதிய மாவட்டங்களின் ஆட்சியர்களை தேர்தல் அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களின் ஆட்சியர்களை தேர்தல் அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் 5 மாவட்டங்களுக்கான தேர்தல் நடத்தும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, […]

Categories
மாநில செய்திகள்

சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கியது!

சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கியது. கடந்த பிப்ரவரி 14ம் தேதி 2020-21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17ம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால். 17ம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்று […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு நேரம் அதிகரிப்பு… 3 ஆயிரம் தேர்வு மையங்கள்; முறைகேட்டில் ஈடுபட்டால் தண்டனை!

தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டிற்கான 12-ம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடக்கிறது. 10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி முடிவடைகிறது. இதேபோல் 11-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 4-ந்தேதி தொடங்கி மார்ச் 26-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுத […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டை அணியவது கட்டாயம் – தமிழக அரசு!

அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என்றும் அணியாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தங்களின் அடையாள அட்டையை அணிய வேண்டும் என்பது ஏற்கெனவே அரசு விதிமுறைகளில் உள்ளது. இருந்தாலும் அரசு ஊழியர்கள் பலரும் வேலை நேரத்தின் போது அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார் எழுந்தது. இது அரசின் கவனத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடையில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் ஓராண்டு நீட்டிப்பு – தமிழக அரசு!

ரேஷன் கடையில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் முதன்மைச் செயலர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட அறிவிப்பில், தமிழக ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டின் கால அவகாசம் பிப். 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. […]

Categories
வேலைவாய்ப்பு

தமிழக அரசில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணி… விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!  

தமிழக அரசில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம். நிறுவனம் : தமிழ்நாடு ரூரல் டெவலப்மென்ட் அண்ட் பஞ்சாயத்து ராஜ்(டி.என்.ஆர்.டி) எனப்படும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை   வேலை : ரோடு இன்ஸ்பெக்டர் எனும் சாலை ஆய்வாளர் வேலை   காலியிடங்கள் : மொத்தம் 248. இதில் மாவட்ட வாரியாக இடங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

43 தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

தமிழகத்தில் 43 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளது. 2020 – 21ம் ஆண்டிற்கான ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வு வழங்குவது குறித்து தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டிருந்தது. அதுகுறித்து பட்டியல் ஒன்றை தயாரித்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்திருந்தது. அதன்படி மத்திய உள்துறை அமைச்சகமானது டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி, ஐ.ஜி உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு பெறுவதற்கான காலியிடங்கள் குறித்து அதில் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் 43 ஐபிஎஸ் […]

Categories

Tech |