Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கலப்பு திருமணம் செய்த ஜோடி… காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… திருப்பூரில் பரபரப்பு…!!

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அருள்புரம் பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேறு சமூகத்தைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ராஜ்குமார் என்ற ஒரு வயதில் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நீங்க எதுவுமே சரியா செய்யல… கோபத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பணிகள்… பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

முறையாக கட்டப்படாத சாக்கடை கால்வாய் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து  பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி சார்பில் போயம்பாளையம் பகுதியில் இருக்கும் ராஜா நகர் ஐந்தாவது வீதியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு வீதியின் இருபுறமும் கட்டப்பட்டு வரும் சாக்கடை கால்வாயில் சென்ட்ரிங் இல்லாமலும், சில இடங்கள் அகலம் குறைவாகவும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போயம்பாளையம் கிளை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சென்ட்ரிங் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லாங்காடு பகுதியில் செல்வராஜ் என்ற சென்ட்ரிங் தொழிலாளி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் தினமும் மது குடித்து விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் தனது வீட்டில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இவன் மேல சந்தேகமா இருக்கு… மடக்கி பிடித்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெக்கலூர் சாலையில் அவிநாசி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பகுதியில் வசித்து வரும் கருப்புசாமி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் சட்டவிரோதமாக 5 லிட்டர் சாராயத்தை விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் கருப்புசாமி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

யாரு இப்படி பண்ணுனது…? நிர்வாணமாக கிடந்த இளம்பெண் சடலம்… திருப்பூரில் பரபரப்பு…!!

நெற்றியில் வெட்டுக்காயங்களுடன் நிர்வாணமான நிலையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நாட்டுக்கல் பாளையம் கிராமத்தில் உள்ள வாய்க்காலில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் நிர்வாணமாக கிடப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக கணியூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் அந்த பெண்ணின் வலது கையில் நாகராஜ் என்று பச்சை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய கணவர்… 6 மாத கர்ப்பிணியின் விபரீத முடிவு… தந்தையின் பரபரப்பு புகார்…!!

ஆறு மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மெட்ராத்தி பகுதியில் சதீஷ் குமார் என்ற டிரைவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் கிருஷ்ணவேணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கிருஷ்ணவேணி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் சதீஷ்குமார் தூங்கிக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணவேணி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து கண்விழித்து பார்த்த சதீஷ் குமார் தனது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த தீ… பல லட்ச ரூபாய் இழப்பு… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

ஏழு கடைகள் தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு எதிரே ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கடைகள் இருக்கின்றது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென இந்த கடைகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கடத்தப்பட்ட போலீஸ் வாகனம்… விபத்தினால் வசமாக சிக்கிய வாலிபர்… திருப்பூரில் பரபரப்பு…!!

போலீஸ் வாகனத்தை கடத்தி சென்ற வாலிபர் லாரியில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக தினேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில் இருக்கும் தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு போலீசாருடன் இணைந்து போக்குவரத்து நெருக்கடி குறித்து தினேஷ் ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கிடையில் போலீஸ் வாகனத்தின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது என்ன கருப்பு கலர்ல இருக்கு… அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்… விவசாயிகளின் கோரிக்கை…!!

அமராவதி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் கருப்பு நிறத்துடன் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் அமராவதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்வரத்தை ஆதாரமாக கொண்டு கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன. இந்நிலையில் அமராவதி ஆறு மற்றும் பிற கால்வாய்கள் மூலம் பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கருப்பு நிறத்தில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போன தடவை மாதிரி ஆக போகுது… கொஞ்சம் கூட பயமே இல்ல… தொற்று ஏற்படும் அபாயம்…!!

தாராபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுவை வாங்கி செல்வதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுவினை வாங்கி செல்கின்றனர். இப்பகுதியில் கடந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு… கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த லாரி… திருப்பூரில் பரபரப்பு…!!

நூல் பண்டல் பாரம் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் பகுதியிலிருந்து நூல் பண்டலை ஏற்றிக்கொண்டு காங்கேயம் வழியாக திருப்பூர் நோக்கி லாரி ஒன்று சென்று உள்ளது. இந்த லாரியை ஸ்டாலின் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த லாரியானது காலை 11 மணி அளவில் சக்கராசனம் பாளையம் பிரிவு நால்ரோடு அருகே சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இப்படித்தான் நடந்துக்கணும்…. தீவிரமாக நடைபெற்றும் பணி… பின்பற்றப்படும் கட்டுப்பாடுகள்…!!

திருப்பூர் மாவட்டத்தின் பல முக்கிய பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணியானது மேற்கொள்ளப்பட்டது. உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் நகராட்சி சார்பில் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணியானது நடைபெற்றுள்ளது. இதனையடுத்து தினசரி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அங்க எங்களால வாழ முடியல… இளம்பெண்ணின் தர்ணா போராட்டம்… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் இளம்பெண் தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் சீதாதேவி என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது குடும்பத்துடன் சென்ற சீதாதேவி நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின் அந்த பெண் கலெக்டர் விஜய கார்த்திகேயனிடம் ஒரு மனுவினை அளித்துள்ளார். அந்த மனுவில் தங்களது வீட்டின் அருகே கழிவுநீர் தொட்டி அமைந்துள்ளதாகவும், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் பண்ணுற வேலையா இது…? 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

16 வயது சிறுவன் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.எஸ். நகர் பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமியை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி நடந்த அனைத்து சம்பவங்களையும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டதும் அதிர்ச்சி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது மட்டும் தான் ஒரே வழி… இனிமேல் எந்த தொந்தரவும் இல்ல… கமிஷ்னரின் அதிரடி உத்தரவு…!!

தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஒருவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டி.டி.பி மில் சாலையில் நடந்து சென்ற தொழிலாளியிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் பழனிச்சாமி நகரில் வசிக்கும் சூர்யா என்பவரை அனுப்பர்பாளையம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவரின் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இவன்தான் எல்லாத்துக்கும் காரணம்… தற்கொலைக்கு முன் வீடியோ பதிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தை வீடியோ பதிவின் மூலம் தனது மனைவி மற்றும் நண்பர்களுக்கு தெரிவித்து விட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி நகர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் அந்த பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனது நண்பரான அசோக் என்பவருக்கு வேறு ஒருவரிடம் கடனாக பணம் வாங்கி கொடுத்து உதவியுள்ளார். இதனையடுத்து வாங்கிய பணத்தை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அப்போ நீங்க டாக்டர் இல்லையா…? சோதனையில் வசமாக சிக்கியவர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

சான்றிதழ் எதுவும் இல்லாமல் பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வயலூர் பகுதியில் முருகன் தவமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரியபட்டி பகுதியில் ஒரு கிளினிக்கை தொடங்கி கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பொதுமக்களுக்கு பொது மருத்துவ சிகிச்சை அளித்துள்ளார். இந்நிலையில் பூளவாடி பகுதியில் வசிக்கும் சரஸ்வதி என்ற 60 வயது மூதாட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தோழிகளுடன் சென்ற சிறுமி… திடீரென நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தோழிகளுடன் குளிக்க சென்ற மாணவி குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாயம்பாளையம் பகுதியில் ரங்கசாமி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு துளசிமணி, கிருத்திகா, ரித்திகா ஸ்ரீ ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இதில் அவிநாசியில் உள்ள அரசுப் பள்ளியில் கிருத்திகா ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னேரி பாளையம் அண்ணமார் கோவில் குட்டையில் குளிப்பதற்காக கிருத்திகா தனது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தலைகீழாக தொங்கிய படி… தற்கொலைக்கு முயன்ற வாலிபர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

சிக்னல் கம்பத்தின் மீது ஏறி தலைகீழாக தொங்கியபடி வாலிபர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நால்ரோடு பகுதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைந்துள்ளது. இந்த சிக்னல் கம்பத்தின் மீது 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் காலை 11 மணி அளவில் ஏரி சிக்னல் உச்சிக்கு சென்று தலைகீழாக தொங்கியதோடு, அங்கிருந்து குதிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து காவல் துறையினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தனித்தனி அறையில் தொங்கிய சடலம்… பார்த்ததும் பதறிய கணவர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மகனுக்கு திருமணம் ஆகாததால் தாய் மகனுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி வ.உ.சி காலனி பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அருண் ராயப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெற்றோர் பெண் பார்த்த போது சரியான வரன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி… அடுத்தடுத்து பல சேதங்கள்… தலைமறைவான ஓட்டுனர்…!!

லாரியை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு ஓட்டுனர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டிற்கு முட்டை லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நாமக்கல்லில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த லாரியை கேரள மாநிலத்தை சேர்ந்த முகமது லத்தீப் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த லாரியானது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொசவம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென லாரி சாலையில் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதியது. இதனையடுத்து மின்கம்பம் சாய்ந்து பிறகும் லாரி நிற்காமல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதை வாங்கிட்டு வரும் வழியில்… விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொண்டரசம்பாளையம் பகுதியில் கதிரேசன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் தனது மாட்டிற்கு தவிடு வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் கொண்டரசம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வேகமாக வந்த கார் இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கதிரேசனை அருகில் உள்ளவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அவர்களால தான் இப்படி நடக்குது… மின் கம்பத்தில் சிக்கிய பேருந்து… பொதுமக்களின் குற்றச்சாட்டு…!!

மினி பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செல்லம் நகரில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு இரவு 8 மணிக்கு தனியார் மினி பேருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இந்தப் பேருந்து கே.பி.ஆர் நகர் நான்கு வழி சாலை சந்திப்பில் இருக்கும் வளைவு பகுதியில் திரும்ப முயற்சிக்கும் போது எதிர்பாராத விதமாக அங்கு உள்ள மின் கம்பத்தின் மீது மோதி விட்டது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மின்கம்பத்தில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கரெக்டான டைம்க்கு போய்ட்டாங்க… இல்லைனா என்ன நடந்துருக்கும்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராஜாவூர் பிரிவில் இருக்கும் டாஸ்மாக் கடையில் நாட்ராயன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடையை பூட்டிவிட்டு நாட்ராயனும், உடன் பணிபுரியும் பணியாளர்களும் அருகில் தாங்கள் தங்கியிருக்கும் அறைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து அதிகாலை 1:30 மணி அளவில் நாட்ராயன் வெளியே வந்து பார்த்தபோது கடைக்கு முன்பு ஒரு மோட்டார் சைக்கிள் நின்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை… போலீசை குக்கரால் தாக்கியவர்… திருப்பூரில் பரபரப்பு…!!

பெண் போலீஸ்காரரை கணவர் குக்கர் மூடியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு காவல் நிலையத்தில் முதல்நிலை பெண் காவலராக தமிழ்ச்செல்வி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாமியப்பன் என்ற கணவர் உள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தமிழ்ச்செல்வி தனது கணவரை விட்டு பிரிந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பேசி தீர்த்திருக்கலாம்… டாக்டர் செய்யுற வேலையா இது… மருத்துவமனையை முற்றுகையிட்ட டிரைவர்கள்…!!

கால் டாக்சி டிரைவரை டாக்டர் தாக்கியதால் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமார் நகர் 60 அடி சாலையில் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ராம் நகர் வழியாக தனது காரில் இரவு 7 மணிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அதே வழியாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.எஸ். நகர் பகுதியில் வசித்து வரும் கால் டாக்ஸி டிரைவரான சிவா […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மிளகாய் ஸ்பிரே அடித்து… பட்டப்பகலில் மர்ம நபர்களின் கைவரிசை…. போலீசாரின் தீவிர விசாரணை…!!

முகத்தில் மிளகாய் ஸ்பிரே அடித்து சாயப்பட்டறை உரிமையாளரிடமிருந்து 8 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்ணாங்கல்பாளையம் பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாக சாயப்பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் திருப்பூர் பல்லடம் ரோடு வித்யாலயம் அருகில் இருக்கும் பாரத் ஸ்டேட் வங்கிக்கு பணம் எடுப்பதற்காக வெங்கடாசலம் சென்றுள்ளார். இதனையடுத்து தனது வங்கி கணக்கில் இருந்து 8 லட்சம் ரூபாய் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேலை செய்ய விட மாட்டகாங்க… எந்த நடவடிக்கையும் எடுக்கல… குடும்பத்தினரின் பரபரப்பு புகார்…!!

வீடு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கே.பி.ஆர் நகர் பகுதியில் வசித்து வரும் சந்திரா என்பவரும், அவரது உறவினர்களும் புகார் மனுவினை அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் கே.வி.ஆர் நகர் பகுதியில் வசித்து வருவதாகவும், தங்களுக்கு ரேஷன் கார்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு  சொந்தமான […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மொத்தமும் நாசமா போச்சு… அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

பஞ்சு மில் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குட்டை காடு பகுதியில் திரு மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் நூல்மில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தொழிலாளிகள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மின்கசிவு காரணமாக மிக்ஸிங் குடோனில் இருந்த கழிவு பஞ்சில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்ல… சுற்றி வளைத்த பொதுமக்கள்… கையும் களவுமாக சிக்கியவர்…!!

கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்த நபரை பொதுமக்கள் சுற்றிவளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இச்சிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆலமரத்து கருப்பண்ணசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் சுற்றுச்சுவர் இல்லாத பாதுகாப்பற்ற இடத்தில் வைக்கப்பட்ட அந்த கோவில் உண்டியலை ஒருவர் உடைத்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து உடனடியாக பொதுமக்கள் ஊத்துக்குளி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்களை பார்த்ததும் அந்த நபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க… அமைக்கப்பட்ட 3 குழு…. தீவிரமாக நடைபெறும் கண்காணிப்பு பணி…!!

விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்க மலர்கொடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் போன்றவை அனைத்தும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த விதிமுறைகளை நிறுவனங்கள் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் எனவும், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இப்படியா கழிவை கொண்டு போறது…? கொஞ்சம் கூட பராமரிக்கல… வாகன ஓட்டிகளின் அச்சம்…!!

டிராக்டரில் ஏறிச் செல்லும் மண் மற்றும் கட்டிட கழிவுகளை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி வட்டாரத்தில் கட்டிடம் கட்டும் பணியானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் கட்டிடங்களில் இருந்து மீதமாகும் மண் மற்றும் கட்டிட கழிவுகளை டிராக்டர்களில் ஏற்றி செல்கின்றனர். ஆனால் இந்த டிராக்டர் சரியான முறையில் பராமரிக்கபடாமலும், போக்குவரத்து துறை அதிகாரிகளால் புதுப்பிக்காமலும் உள்ளது. மேலும் இவ்வாறு கொண்டுசெல்லும் கழிவுகளை தார்ப்பாய் கொண்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்… உறவினர் தெரிவித்த அதிர்ச்சி தகவல்… CCTV கேமராவால் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

பிரின்டிங் பிரஸ் நிறுவனர் வீட்டில் 120 பவுன் நகை மற்றும் 25 லட்ச ரூபாய் ரொக்கம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் சபியுல்லா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாக பிரிண்டிங் நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். மேலும் இவர் தமிழ்நாடு மாநில அமைப்பு கபடி கழக பொதுச் செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில் சபியுல்லா ஊட்டிக்கு தனது குடும்பத்துடன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாதாரண புற்கள் தானேனு நினைச்சோம்… மளமளவென பற்றி எரிந்த தீ… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

காய்ந்த புற்களில் வெயிலின் தாக்கம் காரணமாக தீப்பிடித்து குடியிருப்பு பகுதி வரை தீ பரவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணபதிபாளையம் அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் மேய்ச்சல் நிலம் இருக்கின்றது. இந்த நிலத்தில் இருக்கும் புற்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காய்ந்து சருகாக கிடந்துள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் திடீரென புற்கள் தீப்பற்றி அருகிலிருந்த குடியிருப்பு பகுதி வரை பரவி விட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுக்காக தான் கடத்தினோம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தொடர் விடுமுறை காரணமாக சட்டவிரோதமாக கடத்தி சென்ற 717 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் காவல்துறையினர் தாராபுரம் சாலை, செங்காளிபாளையம் போன்ற பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வேனில் பெட்டிகளில் 717 மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஞாயிறு, திங்கள், செவ்வாய் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் ரெடியா இருக்கு… களமிறங்கிய பாதுகாப்பு படையினர்…. மும்முரமாக நடைபெறும் கண்காணிப்பு பணி…!!

உடுமலை சட்டமன்ற தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு எல்லை பாதுகாப்பு படையினர் தேர்தல் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை சட்டமன்ற தொகுதியில் 296 வாக்குச்சாவடிகள் மற்றும் 87 துணை வாக்குசாவடிகள் என மொத்தம் 380 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்நிலையில் உடுமலை சட்டமன்ற தொகுதியில் 79 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என  கண்டறியப்பட்டதால் அந்த வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும் அந்த வாக்குச்சாவடிகளில் ஒரு நுண் பார்வையாளர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இவங்கதான் அங்க கண்காணிப்பாங்க… இப்படி தான் நடந்துக்கணும்… முடிவடைந்த பயிற்சி வகுப்பு…!!

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு சட்டமன்ற தொகுதியில் நாளை வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதியில் 110 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதால் அப்பகுதியில் 27 நுண்பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனையடுத்து மாநகராட்சி அலுவலகத்தில் 27 நுண் பார்வையாளர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதற்கு தெற்கு தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடனே எங்களுக்கு கால் பண்ணுங்க…. கண்டிப்பா லீவ் குடுக்கணும்…. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை…!!

தேர்தலுக்காக விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் மலர்கொடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில் வேலை பார்க்கும் தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி போன்ற […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அறுவை சிகிச்சை செய்த பின்…. 3 1/2 வயது சிறுவனுக்கு நடந்த சோகம்… கதறி அழுத பெற்றோர்…

3 வயது சிறுவன் மூளை காய்ச்சலுக்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிசநல்லூர் பகுதியில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிற்றரசன் என்ற 3 1/2 வயது சிறுவனும், 1 1/2 வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லூரில் சக்தி கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சிற்றரசனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இந்த ஐடியா கூட நல்லா இருக்கே… 100% வாக்குபதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி…. அதிகாரிகளின் புது முயற்சி…!!

100 சதவீத வாக்குப்பதிவை உறுதிபடுத்தும் வண்ணம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்லடம் ரோட்டில் மாரத்தான் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனால் தேர்தல் அதிகாரிகள் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு  100% வாக்குபதிவை உறுதிபடுத்தும் வண்ணம்  தனியார் அமைப்பினர் மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வருவாய் அதிகாரி சண்முக மூர்த்தி தலைமையில் மாரத்தான் போட்டி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 4 லாரி தண்ணீர்….. கொழுந்து விட்டு எரிந்த தீ…. தீயணைப்பு வீரர்களின் பல மணி நேர போராட்டம்…!!

பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள் மற்றும் தையல் எந்திரங்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கா நகர் செல்லும் சாலையில் லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற ராகுல் என்பவருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு 7 மணி அளவில் பனியன் நிறுவனத்தில் இருந்து கரும்புகை வந்ததை பார்த்தவர்கள் உடனடியாக மத்திய நிறுவன உரிமையாளருக்கு இதுகுறித்த தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பனியன் நிறுவனத்தில் திடீரென […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமணமான 4 மாதத்திலேயே…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோதனையில் சிக்கிய பரபரப்பு கடிதம்….!!

திருமணமான 4 மாதத்திலேயே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரிய வாளவாடி பகுதியில் நித்தியானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மகள் உள்ளார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாரதிக்கும் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரின் மகனான ஸ்ரீதருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பின் தாசம்பாளையம் பகுதியில் பாரதி தனது கணவருடன் வசித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

முதல்ல இதை செஞ்சிட்டு உள்ள வாங்க…. வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் வைத்த செக்…. வித்தியாசமான பதாகையால் பரபரப்பு…!!

கல்லாபுரம் ஊராட்சி பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதி செய்து கொடுத்து விட்டு எங்கள் ஊருக்கு ஓட்டு கேட்டு வாருங்கள் என்று பதாகை வைத்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள், சுயேட்சை வேட்பாளர்கள், வேட்பாளர்கள் போன்ற தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் கல்லாபுரம் ஊராட்சி பூளவாடி புதுநகரில் உள்ள புரட்சிதாய்புரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சந்தோசமாக சென்ற நண்பர்கள்…. சட்டென நேர்ந்த துயர சம்பவம்…. திருப்பூரில் நடந்த கோர விபத்து…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் கோபால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கார்த்திகேயன் என்ற அண்ணன் உள்ளார். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் தங்களது நண்பர்களான சுரேஷ்குமார், கார்த்தி, வடிவேல் போன்றோருடன் வீரப்பூர் கோவிலுக்கு காரில் புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து திருப்பூருக்கு மீண்டும் காரில் கரூர்-கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

3 வயசுலேயே இவ்வளவு திறமையா…. இந்திய சாதனை புத்தகத்தில் இடம்…. வியக்க வைத்த சுட்டி குழந்தை…!!

மூன்று வயது ஆவதற்கு முன்னரே இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சிறுவன் அசத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேரன் நகரில் ஜான்பால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு விதுஷன் என்ற மகன் உள்ளான். இந்த சிறுவன் தனக்கு மூன்று வயது ஆவதற்கு முன்னரே தேசிய அளவில் சாதனையாளர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளான். இந்த சிறுவன் 1 நிமிடம் 6 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே பக்காவா ரெடி ஆகுது…. மின்விளக்கு பொருத்தும் பணி தீவிரம்…. அதிகாரிகளின் திடீர் ஆய்வு….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் வடக்கு தெற்கு அவிநாசி, தாராபுரம், உடுமலை, பல்லடம், மடத்துக்குளம், காங்கேயம் போன்ற எட்டு சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவுகான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்படுகின்றன. இந்நிலையில் இந்த எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு முடிந்தபிறகு வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் அரசு மகளிர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

துணி சுற்றி வைத்தும் பயனில்லை…. காட்டு பன்றிகளின் அட்டகாசம்…. வருத்தத்தில் விவசாயிகள்…!!

காட்டுப்பன்றிகள் மக்காச் சோளப் பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலம் பகுதியில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு அறுவடை முடிந்து விட்டது. இந்நிலையில் குறைந்த அளவு தண்ணீர், குறைந்த செலவு போன்றவற்றை மனதில் வைத்துக் கொண்டு விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் மக்காச்சோள பயிர்களை அதிகளவு நாசம் செய்கின்றன. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது,  உணவு தேவைக்காக காட்டு பன்றிகள் விளை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுல கொடிய விஷம் இருக்கு…. குடியிருப்புக்குள் நுழைந்த கட்டு விரியன் பாம்பு…. அச்சத்தில் நடுங்கிய பொதுமக்கள்….!!

கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சம்பளம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் வீதியில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் 4 அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு நுழைந்துவிட்டது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 15 நிமிடங்கள் போராடி புதருக்குள் பதுங்கியிருந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

100 அடி செல்போன் கோபுரத்தில்….. இறங்க முடியாமல் தவித்த வாலிபர்….. திருப்பூரில் பரபரப்பு….!!

செல்போன் கோபுரத்தின் மீது ஏறி கீழே இறங்க முடியாமல் தவித்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.என் ரோடு சந்திப்பில் இருக்கும் கட்டிடத்தின் மேல் மாடியில் 100 அடி செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாலை 4 மணி அளவில் இந்த செல்போன் கோபுரத்தின் மீது ஒரு வாலிபர் ஏறி நின்று உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் அவரை கீழே இறங்குமாறு கூறி உள்ளனர். ஆனால் அவரால் செல்போன் கோபுரத்திலிருந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உத்தரவை நிறைவேற்றவில்லை…. ஜப்தி செய்யப்பட்ட அரசு பேருந்து…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

இறந்தவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வளையபாளையம் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு சேவூர் கிராமியம் பாளையம் அருகே ரவிச்சந்திரன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து மோதிய விபத்தில் ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து திருப்பூர் […]

Categories

Tech |