திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூட்டுப் பண்ணை திட்டத்தின் கீழ் சம்பா சாகுபடிக்காக ரூ6 லட்சம் மதிப்பிலான பொருட்களை விவசாயிகள் கொள்முதல் செய்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை அடுத்த வாழப்பாடி ஊராட்சியில் உள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சம்பா நெல் சாகுபடிக்கு இடு பொருட்கள் கொள்முதல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2019-20 ஆம் ஆண்டு கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் நடப்பு சம்பா சாகுபடிக்கு 2.5 டன் நெல் […]
