சிறுத்தை மீண்டும் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் காந்திபுரம் பகுதியில் கன்னியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வதற்காக பட்டிக்கு சென்று பார்த்த போது 3 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து கன்னியம்மாள் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது சிறுத்தை […]
