தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊத்து ஓடை வனப்பகுதியை ஒட்டி மாரிமிக்கேல் என்பவருக்கு சொந்தமான மரவள்ளி தோட்டம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இவர் தனது தோட்டத்தை பார்வையிட சென்ற போது அங்கு 8 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் இதுபற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு மாரிமிக்கேல் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனக்காப்பாளர் […]
