Categories
மாநில செய்திகள்

‘முதலமைச்சரின் அறிவிப்பை விசிக வரவேற்கிறது’ – தொல். திருமாவளவன்..!

டெல்டாப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்ததை விசிக வரவேற்கிறது என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் விசிக கட்சியின் மண்டல செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம், “கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை அமைக்க, தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. அதனால் விளைநிலம் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். விஜய் படப்பிடிப்புத்தளத்தில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. ராஜிவ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”மதத்தை அளவுகோலாக வைக்கும் பாஜக”திருமாவளவன் ஆவேசம் …!!

மதத்தை அளவுகோலாக வைத்திருக்கிறது பாஜக அரசு என்று திருமாவளவன்  ஆவேஷமாக தெரிவித்துள்ளார். திருமாவளவன் பேசுகையில்  , சிஐஏ எதிர்ப்பதற்கு முக்கியமான காரணம் மதத்தை அளவுகோலாகக் கொண்டு இந்த சட்டம் இயக்கப்பட்டு இருக்கிறது. இது முழுக்க முழுக்க அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த ஒரு யுத்தியாகவே இதை கையாளுகிறது பிஜேபி. இதுவரை எந்த அரசும் , எந்த காலத்திலும் மதத்தை ஒரு அளவுகோலாக யாரும் கையாண்டது இல்லை. அகதிகளாக வந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடரும் கோல போராட்டம்… அழகான கோலம் போட்டு எதிர்ப்பை காட்டிய திருமா!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது வீட்டின் வாசல் முன்பு கோலம் போட்டார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சட்டத்தால் மத்திய அரசுக்கு எதிர்ப்பலை நாடு முழுவதும் உருவாகியுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் மக்கள் வித்தியாசமான முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் […]

Categories
மாநில செய்திகள்

திருமா, சித்தார்த் உட்பட 600 பேர் மீது வழக்குப் பதிவு..!!!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த் உட்பட 54 அமைப்புகளைச் சேர்ந்த 600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவ அமைப்பினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன், இந்திய தவ்ஹீத் கூட்டமைப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 54 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

’பிக்பாஸ்’ புகழ் காயத்ரி ரகுராம் மீது வழக்குப்பதிவு..!!

சமூக வலைதளங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து கருத்து தெரிவித்த நடிகை காயத்ரி ரகுராம் மீது கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து கோயில்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற மாநாட்டில் சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து பல்வேறு இந்து அமைப்புகள், அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். மேலும் இந்து அமைப்புகள் அளித்த புகாரின் பேரில், பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பிரமுகரை கைது செய்யக்கோரி விசிக புகார்!

 திருமாவளவனை அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் புகைப்படம் பதிவிட்ட அதிமுக பிரமுகரை கைது செய்யக்கோரி, பூந்தமல்லி காவல்நிலையத்தில் விசிக-வினர் புகார் அளித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பியுமான திருமாவளவன் சமீபத்தில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் இந்து ஆலயங்கள் குறித்து பேசியது சர்சைக்குள்ளானது. இதற்கு இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில், சென்னை அடுத்த பூந்தமல்லியில் வசிக்கும் அதிமுக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

காவேரி குறித்து பேசிய திருமாவளவன்… கூச்சலிட்ட கர்நாடக MP_க்கள் ..!!

மக்களவையில் திருமாவளவனை கர்நாடக MP_க்கள் பேச விடாமல் தடுத்ததால் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது. மக்களவையில் கூட்டத்தில் இன்று சிதம்பரம் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் , காவேரியில் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க வேண்டுமென்று பேசினார். அப்போது அங்கிருந்த கர்நாடக MP_க்கள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். எங்களுக்கே தண்ணீர் இல்லை. வறட்சியில் இருக்கின்றோம் என்ற முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து திருமாவளவன் பேச முயன்ற போது பேச விடாதவாறு  கர்நாடக MP […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொள்ளாச்சி வழக்கு C.B.I_யை விசாரணையில் உள்நோக்கம்….. திருமாவளவன் கருத்து…!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கை அவசரம் அவரசரமாக CBI விசாரணைக்கு மாற்றியதில் உள்நோக்கம் இருக்குமோ என்று ஐயம் ஏற்படுவதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]

Categories

Tech |