திருப்பத்தூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை அடுத்த வீராணம் குப்பம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், நாள் தோறும் சிறப்பு பூஜைகள் இன்று வரை நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் பூஜைகள் அனைத்தையும் முடித்துவிட்டு பூசாரி கோவிலை பூட்டிவிட்டு […]
