இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடியதற்கு பாகிஸ்தான் குற்றம் சுமத்திய நிலையில் ஐ.சி.சி அதற்க்கு விளக்கம் அளித்துள்ளது. புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் (CRPF) 40 பேர் கொல்லப்பட்டனர். CRPF வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்திய ராணுவத்துக்குரிய தொப்பியை அணிந்து விளையாடினர். அதுமட்டுமில்லாமல் அந்த போட்டியின் மூலம் வரும் […]
