துறைமுகத்தை திறந்து விசைப்படகுகளில் உள்ள மீன்களை மீனவர்கள் விற்பனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த மீன்பிடி துறைமுகத்தின் முக துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர்கதை ஆகிவிட்டது. இங்கு இதுவரை 29 மீனவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மீன்பிடி துறைமுகத்தை மறுசீரமைக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் ரூபாய் […]
