பெண்ணின் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வில்லோனி எஸ்டேட் பகுதியில் அன்னத்தாய்(51) என்பவர் வசித்து வருகிறார். இவர் தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லும்போது வீட்டின் முன் பகுதியில் சாவியை வைத்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த அன்னத்தாய் பீரோவில் இருந்த 1500 ரூபாய் பணம் மற்றும் 2 பவுன் தங்க நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]
