நூதன முறையில் தங்க நகையை திருட முயன்ற வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த அமித் குமார் என்பவர் தான் தங்க நகைகளுக்கு பாலீஷ் போடுவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய ராமலிங்கம் 27 கிராம் எடையுள்ள தங்க நகைகளை அமித்குமாரிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் திடீரென அமித்குமார் தங்க நகைகளை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி […]
