வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவை தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரங்கியூர் குச்சிப்பாளையம் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்துவருகிறார். இவர் செங்கல் சூளை நடத்தி வருவதால் தனது மனைவியுடன் சக்திவேல் அங்கு சென்றுள்ளார். அதன்பிறகு அந்த தம்பதிகள் வீட்டிற்கு திரும்பி வராமல் அங்கு இருக்கும் கொட் டகையிலேயே தங்கி உள்ளனர். இந்நிலையில் சக்திவேலின் மகன் சசிகுமார், மருமகள் மற்றும் அவர்களது குழந்தை என மூன்று பேரும் ஒரு அறையில் தூங்கி […]
