மதுரை ரயில் நிலையத்தில் தூக்க கலக்கத்தில் பிளாட்பாரத்துக்கு இடையே சிக்கிய பெண் பயணியை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு படையினர் மீட்டனர். மதுரையைச் சேர்ந்த பூர்ணிமா மற்றும் அவரது 2 குழந்தைகளும் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லக்கூடிய அனந்தபுரி விரைவு ரயிலில் வந்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது பூர்ணிமா இறங்கவில்லை. அப்போது அவர் தூங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து ரயில் இயக்கப்படும் நிலையில் சுதாரித்துக் கொண்ட அவர் வேகமாக இறங்க முற்பட்டபோது தவறி பிளாட்பாரத்துக்கு இடையே விழுந்து சிக்கி […]
