கோவிலின் கதவு திறக்கபடாத நிலையிலும் கருவறையின் முன் கதிரவனின் ஒளி விழுந்ததை பார்த்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியில் ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு அனந்த சயனக் கோலத்தில் காட்சியளிக்கும் பெருமாளை பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர் . மேலும் பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி ஆரம்பத்தில் மாலை நேரம் கதிரவனின் பொன்னிறக் கதிர்கள் அனந்த சயனத்தில் பள்ளி கொண்டு காட்சியளிக்கும் பெருமாளின் உடல் மீது விழும் வகையில் இந்த கோவிலானது வடிவமைக்கப்பட்டுள்ளது. […]
