தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் மோசமான நாடகங்களை பார்க்க வேண்டாம். மக்கள் மனதை கெடுக்கும் நாடகங்களை தடை செய்ய வேண்டும். செய்தி சேனல்களை மக்கள் பார்த்து உலக நடப்புகளை அதிகளவு தெரிந்து கொள்ளவேண்டும் என அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்துகொண்டு 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு, தமிழ்நாடு அரசின் சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை […]
