செயற்கை மணல் தயாரிக்கப் பயன்படுத்துகின்ற குட்டையில் 2 சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பச்சூர் செத்தமலை பகுதியில் சென்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரி என்ற மகன் இருந்துள்ளார். இவர் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களான கோகுல்ராஜ் மற்றும் தனுஷ்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து ரயில் தண்டவாளம் அருகாமையிலிருக்கும் செயற்கை மணல் தயாரிக்கப் பயன்படுத்துகின்ற குட்டையில் குளிக்க சென்றுள்ளனர். இதனை அடுத்து அந்த குட்டையில் 15 […]
